» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்!

வெள்ளி 3, அக்டோபர் 2025 10:37:37 AM (IST)



தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள்  179 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் செப்.26 மற்றும் 27 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

அதன் பின்னர் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்.2ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுழற்சி முறையில் 179 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory