» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
வியாழன் 30, அக்டோபர் 2025 11:16:53 AM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இயக்க வேண்டும் வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் எம். பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி-சென்னை முத்துநகர் விரைவு ரயிலில் எப்போதும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதைத் தவிர்க்க, தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்களைத் தினமும் இயக்க வேண்டும்.
ரயில் எண். 16765-16766 தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். ரயில் எண். 22101-22102 மதுரை-லோகமான்ய திலக் விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:52:46 PM (IST)

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 30, அக்டோபர் 2025 12:38:19 PM (IST)

மதுரையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
வியாழன் 30, அக்டோபர் 2025 12:03:17 PM (IST)

மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
வியாழன் 30, அக்டோபர் 2025 11:58:15 AM (IST)

இளையரசனேந்தல் பிர்கா விவகாரத்தில் அரசாணை ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 30, அக்டோபர் 2025 10:31:27 AM (IST)

குரூப்-4 பணிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்பு : 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அவகாசம்!
வியாழன் 30, அக்டோபர் 2025 8:26:24 AM (IST)




