» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் தரிசன முறை தொடர்பான வழக்கு : அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சனி 8, நவம்பர் 2025 8:43:15 AM (IST)
திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஆனால், அங்கு பக்தர்கள் அமரும் இடம், மேற்கூரை, குடிநீர் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே பக்தர்கள் நலன் கருதி சிறப்பு டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல விரைவான தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பக்தர்கள் நலன் கருதி தரிசனத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சனி 8, நவம்பர் 2025 12:45:48 PM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் லிஃப்ட் அமைக்க என்டிபிஎல் ரூ.94 லட்சம் உதவி
சனி 8, நவம்பர் 2025 8:02:14 AM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)




