» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது நடவடிக்கை : ஏர்ஹாரன்களும் பறிமுதல்!!
புதன் 26, நவம்பர் 2025 8:26:51 AM (IST)

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஓடும் மினி பஸ்களில் திடீர் சோதனை நடத்தினர்.
மினி பஸ்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமே ரூ.11 தான். ஆனால் 4 மினி பஸ்களில் பயணிகளிடம் ரூ.13, ரூ.14 என கூடுதலாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுடன் மேள தளம் முழங்க மனு கொடுக்க வந்த விவசாயி!
புதன் 26, நவம்பர் 2025 9:42:49 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!
புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:12:54 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!
புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)




