» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
‘தித்வா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், வரும் விமானங்கள் என 47 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மழையின் வேகம் ஓரளவு குறைந்ததோடு, இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. ஆனால் சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய 2 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையை எரித்துக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 7:32:16 PM (IST)

ஆளுநர் மாளிகை 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 1, டிசம்பர் 2025 5:45:29 PM (IST)

கனமழையால் பள்ளிக் குழந்தைகள் பரிதவிப்பு: ஆட்சியாளர்களுக்கு அன்புமணி கண்டனம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:46:14 PM (IST)

டித்வா புயல் பாதிப்பு : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு
திங்கள் 1, டிசம்பர் 2025 4:24:34 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)

பேருந்து ஓட்டுநர்களின், பயண நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 11:58:49 AM (IST)




