» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் : 2பேர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

கயத்தாறு அருகே பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் 750 கிலோ குட்கா புகையிலையை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சுங்கச்சாவடியில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த டாடா இன்பிரா லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சுமார் சுமார் 750 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநரான திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேஷ் கண்ணன் (26), மற்றும் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோஸ்வாராஜா (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையா? விஜய் கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதன் 10, டிசம்பர் 2025 5:27:49 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
புதன் 10, டிசம்பர் 2025 4:12:55 PM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பயணம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி
புதன் 10, டிசம்பர் 2025 1:44:50 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:53:00 AM (IST)


