» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம்
வெள்ளி 2, ஜனவரி 2026 4:46:50 PM (IST)
திருச்செந்தூர் அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம் அடைந்தனர்.
சென்னை, திருவெற்றியூரைச் சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28ஆம் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (31) ஓட்டி வந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் வந்த 13 பேர் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.
வெள்ளி 2, ஜனவரி 2026 5:22:59 PM (IST)

அமித்ஷா வருகைக்கு பின்பு தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் போகிறது: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
வெள்ளி 2, ஜனவரி 2026 4:56:55 PM (IST)

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:22:46 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)


