» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நூறு ஆண்​டு​கள் பழமை​யான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!

வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

நூறு ஆண்​டு​கள் பழமை​யான வழி​பாட்​டுத் தலத்தை இடிக்​கக் கூடாது என்ற சட்​டத்தை திமுக அரசு மீறியுள்ளதாக இந்து முன்​னணி மாநில அமைப்​பாளர் ச.ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசியை அடுத்​துள்ள பெரு​மாநல்​லூர் ஈட்​டிவீரம்​பாளை​யம் ஊராட்​சிக்கு உட்​பட்ட ராக்​கி​யாபட்டி அறிவொளி நகர் பகு​தி​யில் குமரன்​குன்று என்ற பெயரில் முரு​கன், விநாயகர், சிவலிங்​கம், நந்தி உள்​ளிட்ட சந்​நி​தி​கள் கொண்ட செல்வ முத்​துக்​கு​மார சுவாமி கோயில் 2 ஏக்​கர் பரப்​பில் அமைந்​துள்​ளது.

அரசுக்​குச் சொந்​த​மான இடத்தை ஆக்​கிரமித்து கோயில் கட்​டி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நேற்று வரு​வாய்த் துறை​யில் கோயிலை இடித்து அகற்​றினர். இதையறிந்த இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், பொதுச் செய​லா​ளர் கிஷோர்​கு​மார் உள்​ளிட்​டோர் அங்கு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது போலீ​ஸாருக்​கும், இந்து முன்​னணி​யினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யத்​துக்கு லேசான காயம் ஏற்​பட்​டது. பின்​னர், அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி, அனை​வரை​யும் சமா​தானப்​படுத்​தினர்.

இதையடுத்​து, திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் சேர்க்​கப்​பட்​டார். அங்கு இந்து முன்​னணி​யினர் மற்​றும் பாஜக​வினர் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது.இதற்​கிடை​யில், இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து தாராபுரம் சாலை, அவி​நாசி சாலை, காந்தி நகர், புஷ்பா திரையரங்கு சந்​திப்​பு, புதிய பேருந்து நிலை​யம் என 5 இடங்​களில் மறியலில் ஈடு​பட்ட இந்து முன்​னணி​யினர் 120 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்து முன்​னணி மாநில அமைப்​பாளர் ச.ராஜேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, "தி​முக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினரின் தூண்​டு​தலால், அதி​காரி​கள் கோயிலை இடித்​துள்​ளனர். அங்கு சென்ற இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தில், அவருக்கு காயம் ஏற்​பட்​டுள்​ளது. 100 ஆண்​டு​கள் பழமை​யான வழி​பாட்​டுத் தலத்தை இடிக்​கக் கூடாது என்ற சட்​டத்தை மீறி, கோயிலை இடிக்க உத்​தர​விடு​வதே தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும். அத்​து​மீறிய போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory