» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வியாழன் 22, ஜனவரி 2026 4:46:46 PM (IST)

சென்னை புத்தககண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் வெளியிடு!
வியாழன் 22, ஜனவரி 2026 4:07:25 PM (IST)

தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 22, ஜனவரி 2026 4:04:51 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

பராமரிப்பு பணி: வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:41:55 PM (IST)

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?
வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)

