» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)
மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் மற்றும் பெண்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நாய் கடியால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 333 பேர் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆனி ஆடிட், லிசி, அமலா மேரி, தங்கம், மேரி ஸ்டெல்லா ஆகிய பெண்கள் பலத்த காயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று குழந்தைகளுக்கு தலை மற்றும் முகத்தின் பல்வேறு இடங்களில் நாய் கடித்திருக்கிறது. மேலும் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணக்குடி மீனவ கிராமத்தில் தினமும் சுற்றி திரியும் தெரு நாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : தமிழக அரசு உத்தரவு
புதன் 28, ஜனவரி 2026 5:04:44 PM (IST)

கறிக்கோழி விலை உயர்வு படிப்படியாக குறையும்: உற்பத்தியாளர்கள் பேட்டி!
புதன் 28, ஜனவரி 2026 4:24:31 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை!
புதன் 28, ஜனவரி 2026 3:18:10 PM (IST)

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை : ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
புதன் 28, ஜனவரி 2026 10:31:07 AM (IST)

இந்தியா-ஐரோப்பிய ஒப்பந்தம்: தமிழகத்துக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
புதன் 28, ஜனவரி 2026 8:31:43 AM (IST)

