» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40 சதவீதம் உயர்வு : விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு
வியாழன் 29, ஜனவரி 2026 7:58:50 AM (IST)

மூலப்பொருளான நிலக்கடலை விலை அதிகரித்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நலச் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னர், சங்கச் செயலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து, தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் இத்தொழில் மூலம் பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். மூலப்பொருளான நிலக்கடலையின் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 14,500-ஆக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், மொத்த விலையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 160-180 க்கு விற்பனையான நிலையில் இனி ரூ. 220க்கு விற்கப்படும். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 200-220 க்கு விற்பனையான நிலையில், இனி ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 260 வரை விற்கப்படும். இந்த விலை உயர்வு புதன்கிழமை (ஜன.28) முதல் அமலுக்கு வரும்.
பல ஊர்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரில் உள்ளூர் கடலை மிட்டாய்களை விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். நிலக்கடலை விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம் : என்.ஆனந்த் அறிக்கை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:43:31 AM (IST)

கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 29, ஜனவரி 2026 11:26:57 AM (IST)

தாமதமான நடவடிக்கை என்றாலும், யுஜிசி விதிகளில் மாற்றம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 29, ஜனவரி 2026 11:11:32 AM (IST)

பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை : நண்பர்களே தீர்த்துக்கட்டிய கொடூரம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:27:26 AM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 7:54:55 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.1ல் தைப்பூசம் : பூஜை நேரங்கள் மாற்றம்!
வியாழன் 29, ஜனவரி 2026 7:49:18 AM (IST)

