» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)
கோவில்பட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இரு வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த இரு இளஞ்சிறார்கள் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் இன்று (03.03.2026) சங்கரலிங்கபுரம் முதல் மூப்பன்பட்டி வரை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதி பாண்டியன் (22), பாலமுருகன் (23) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இரு இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேதுபதி பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய இரு இளஞ்சிறார்கள் திருநெல்வேலியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், துரிதமாகச் செயல்பட்டு எதிரிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரைத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 12:09:26 PM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

