» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)
தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த ஆ. இரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தின் ஆணையராகப் பணிபுரிந்து வந்த மூ. குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து விடுவிக்கப்படும் இரவிச்சந்திரன், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வந்த மு. கோட்டைக்குமாருக்கு பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்பார். இதுபோல் 20 வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

