» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி தனியார் ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)



தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் எண்ணெய் ஆலை மற்றும் டயபர் தயாரிப்பு தொழிற்சாலை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் இயங்கி வரும் தனியார் எண்ணெய் ஆலை வளாகத்தில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான 'டயபர்' தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இதன் கிடங்கில் டயபர் தயாரிக்கத் தேவையான பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இன்று நண்பகல் வேளையில், ஆலைக்கு அருகே இருந்த மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பொறிகள் சிதறியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தீப்பொறிகள் பஞ்சுக் கிடங்கில் விழுந்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவி ஆலை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

தகவலறிந்து தூத்துக்குடி, தெர்மல் நகர் மற்றும் சிப்காட் ஆகிய பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இதனால் தீ அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டயபர் மூலப்பொருட்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன. விபத்து குறித்துத் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

srinivasanMar 9, 2026 - 05:43:36 PM | Posted IP 172.7*****

avm oil mill and kamal health care pltd

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory