» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)
நாகர்கோவிலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த தற்காலிக நகை மதிப்பீட்டாளரைப் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.வங்கியின் தற்காலிக நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த கீழக்கல்குறிச்சியைச் சேர்ந்த ரகுவரன் (36), மற்றவர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து வங்கியின் முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுவரனைத் தேடி வந்து இன்று கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - பாதிரியார் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசை விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

