» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!

செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)

நாகர்கோவிலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த தற்காலிக நகை மதிப்பீட்டாளரைப் போலீசார் கைது செய்தனர். 

குமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

வங்கியின் தற்காலிக நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த கீழக்கல்குறிச்சியைச் சேர்ந்த ரகுவரன் (36), மற்றவர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

இது குறித்து வங்கியின் முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுவரனைத் தேடி வந்து இன்று கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory