» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - பாதிரியார் கைது!

செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 16 லட்ச ரூபாயைப் பறித்த பாதிரியாரைப் போலீசார் கைது செய்தனர். 

திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஹார்டர் (37). பாதிரியாரான இவர், கேரளா மாநிலத்தில் கிறிஸ்தவக் கூட்டங்கள் நடத்தி பிரபலமானவர். பிரார்த்தனை கூட்டத்தின் போது வெளிநாட்டில் நர்ஸாக வேலை பார்த்து வரும் இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டி 16 லட்ச ரூபாயைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிரியார் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகியதை அறிந்து அதிர்ச்சியடைந்த நர்ஸ், பந்தளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சாம் ஹார்டரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பத்தினம் திட்டா, திருவல்லா ஆகிய போலீஸ் நிலையங்களில் நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory