» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!

வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)



ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் தவித்து வரும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார்.

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்கு தவித்து வரும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: "ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, அங்கு வேலை செய்து வரும் இந்தியர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது."

மத்திய அரசு உடனடியாக அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அங்குள்ள மீனவர்களின் நிலை குறித்துத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுடன், அவசர கால உதவி மற்றும் தொடர்பு மையங்களை (Help Desks) அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடு: மேலும், போர் பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் மீனவர்களை, சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரின் உறுதி: இந்தக் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory