» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

திங்கள் 30, மார்ச் 2026 8:42:33 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைப் புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். 

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைப் புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள் 

ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி: டாக்டர் கிருஷ்ணசாமி (நிறுவனர் மற்றும் தலைவர், புதிய தமிழகம்). 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: ராஜசுதன் 

கோவில்பட்டி தொகுதி: அதிக்குமார் 

விளாத்திகுளம் தொகுதி: மாடசாமி 

புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நெல்லையில் போட்டியிடுகிறார்

இதன் பின் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தற்போது 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருக்கிறோம், மீதம் உள்ளதை விரைவில் அறிவிப்போம். புதிய தமிழகம் கட்சி 60 முதல் 70 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்தோம். அதற்காக அவரது வீட்டில் நேரில் சந்தித்தோம். வேலுமணியை வீட்டில் சந்தித்தோம். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ எதுவுமே நடக்கவில்லை என்பது போல பேசுகிறார் இபிஎஸ்.

அதற்கு காரணம் என்னவென்று அவருக்குத்தான் தெரியும். நடந்ததை நடந்ததாகச் சொல்லுகிறோம். புறக்கணிக்கும் காட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும், களத்தில் சந்திக்க வேண்டும், ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருக்கிறோம். அதிமுகவை முடிச்சுக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். எங்களால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முன்னாள் முதல்வர், ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் அவர் பொய் சொன்னால் என்ன செய்வது? இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory