» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி தெரிவித்தார்.
நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர். காந்தி, தொகுதியின் முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எம்.ஆர். காந்தி கூறியதாவது: "நாகர்கோவில் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே எனது முதன்மையான நோக்கம்.
இத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசின் உதவியுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாகர்கோவிலில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இத்திட்டத்தின் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். தொகுதியின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அப்போது அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:44:49 PM (IST)

அதிமுகவுக்கு ஆதரவு : தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் இபிஎஸ் உடன் சந்திப்பு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:21:04 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

