» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு ஏழுமலையான் நகர் பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர், வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
துாத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு ஏழுமலையான் நகர் பகுதியில் வகிக்கும் மக்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரை நேரில் சந்தித்து மனு அணித்தனர். அந்த மனுவில், "துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியமாக இருந்த போதும், நகராட்சியாக இருந்த போதும் மாநகராட்சியாக ஆன பிறகும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை.
அனைத்து வீடுகளும் கட்டிட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டவை. முறையாக தீர்வையும் செலுத்தி வருகிறோம். மனைப்பிரிவு அமைத்தவர்கள் சாலை வசதி மற்றும் 21 மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்துக் கொடுத்தார்கள். அதன் பின்னர், ஊராட்சி ஒன்றியமாக இருந்தபோதிலும், மாநகராட்சியாக ஆன பிறகும், எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்நகரில் தண்ணீர் தொட்டியிருந்தும், அத்தொட்டியில் தண்ணீர் இல்லாத அவல நிலை நீடிக்கிறது.
இது தொடர்பாக அப்போதுள்ள பஞ்சாயத்து தலைவரிடமும், பின்பு மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவரிடமும், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலரிடமும் பல முறை நேரிலும் பதிவுத் தபால் மூலமாகவும் மனு அளித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் கங்கையம்மாள் என்பவர் "நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர், வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் நிறைவேற்றாவிட்டால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த மூர்த்தி அவர்கள் எங்கள் பகுதியில் கள ஆய்வு செய்து ஒரு வீடு இருந்தால் கூட அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். ஆனால் இன்றுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:44:49 PM (IST)

அதிமுகவுக்கு ஆதரவு : தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் இபிஎஸ் உடன் சந்திப்பு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:21:04 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

