» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த வங்கி ஊழியரின் குடும்பத்தினருக்கு, வட்டியுடன் சேர்த்து ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கலக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அஜின் (26), அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, அஜின் தனது மோட்டார் சைக்கிளில் நெடுவிளை கிறிஸ்து அரசர் ஆலயம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்த அஜினின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30,14,792-யை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்தத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:21:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தமிழக தேர்தல் அரசியலில் புதிய விடியல்: 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் கருத்து!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:04:18 PM (IST)

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

