» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிகழ்வு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களில், எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் "எதையும் தாங்கும் இதயமே! மீண்டும் வா..." என்ற வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. இது கட்சியின் தற்போதைய இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி மீண்டு வருவார் என்ற தொண்டர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், தொண்டர்கள் இன்னும் அவரது தலைமையையே உறுதியாக நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பழைய பேருந்து நிலையம், வி.வி.டி சிக்னல் மற்றும் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: ஜமாத் உலமா சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 17, மே 2026 9:40:41 PM (IST)

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!
ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)



ஏம்பாமே 13, 2026 - 09:47:09 AM | Posted IP 104.2*****