» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்

திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)



மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.07.2026) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 525 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடரந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால் கோரி வரப்பெற்ற மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.2,79,000 மதிப்பில் செயற்கை கால் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி .மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) புஷ்பாதேவி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு சரவணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .கலைமதி, உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory