» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை – சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 3:43:18 PM (IST)
திரைப்படம் தயாரிக்க வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தராமல் காசோலை மோசடி செய்த வழக்கில், திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்காகக் கோபி என்பவரிடமிருந்து விமல் ₹4.5 கோடி கடனாகப் பெற்றுள்ளார். அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்தது. அதன் பின்னரும் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கோபி சென்னை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பளித்தார். நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக விமலுக்குக் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)

நீரோவின் ஆட்சி போல் தவெக அரசு செயல்படுகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:39:43 PM (IST)

தூத்துக்குடி காவல் மரணம்: அரசே இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது – கனிமொழி எம்பி கண்டனம்
வியாழன் 23, ஜூலை 2026 3:34:10 PM (IST)

கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தடியடி நடத்தினால் நாடு தோற்றதாக அர்த்தம்: கமல்ஹாசன் காட்டம்!
வியாழன் 23, ஜூலை 2026 12:30:04 PM (IST)

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை: மாணவிக்கு த.வெ.க பாராட்டு
வியாழன் 23, ஜூலை 2026 10:13:09 AM (IST)


