» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

VijayVasantMinisterpetiton.jpg

கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்பி மனு அளித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விரிவான கோரிக்கை மனு ஒன்றை நேரில் சமர்ப்பித்தார்.

இந்த மனுவில், கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தினசரி ரயில் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போதுள்ள ரயில்களின் சேவையை நீட்டித்தல், புதிய ரயில்களை இயக்குதல், ரயில் சேவைகளை அதிகரித்தல், பயணிகள் வசதிக்கேற்ப கால அட்டவணையில் மாற்றம் செய்தல், தேவையான இடங்களில் கூடுதல் நிறுத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த கோரிக்கை மனுவில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory