» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியில் ‘கிருஷ்ணா பட்டாசு ஆலை’ செயல்பட்டு வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு தொழிலாளர் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆலைக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், நாட்டின் 90% பட்டாசு தேவையை இப்பகுதியே பூர்த்தி செய்கிறது. கடந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கும், இந்த ஆண்டு ஆய்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு 200-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கும் உற்பத்தித் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்றன. ஆலைகளைத் திறக்க வலியுறுத்தியும் ஆய்வுகளைக் கண்டித்தும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
"தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது" எனச் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வும் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்.டி.ஆர். பாணி அதிசயத்தை நிகழ்த்தியவர் விஜய்: கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் பேச்சு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:43:51 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:27:51 AM (IST)

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:33:26 AM (IST)


