» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

கோவில்பட்டி நகராட்சியின் (பொறுப்பு) ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டு, புதிய பொறுப்பு ஆணையராக வீரமுத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உதவி ஆணையர் ஏ. வீரமுத்துகுமார் மறு உத்தரவு வரும் வரை கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர் உடனடியாகக் கோவில்பட்டி நகராட்சியில் பொறுப்பேற்று, அதற்கான அறிக்கையை உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:07:58 AM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)


