» சினிமா » செய்திகள்
ரூ.2.52 கோடி செலுத்தத் தவறினால் 6 மாத சிறை: ரஜினி பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:31:33 PM (IST)
கோச்சடையான்’ திரைப்பட வெளியீட்டிற்காகப் பெறப்பட்ட ரூ.10 கோடி கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தக் கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதைத் தொடர்ந்து, கடன் வழங்கிய தரப்பு வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் ரூ.2.52 கோடியை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைச் செலுத்தத் தவறினால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த 3 எழுத்து நடிகைதான்.. ரவி மோகன் குற்றச்சாட்டு!
சனி 16, மே 2026 4:20:22 PM (IST)

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

