» சினிமா » செய்திகள்

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது: கமல்ஹாசன் இரங்கல்!

சனி 27, ஜூன் 2026 5:50:53 PM (IST)

மறைந்த முன்னணி இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்குத் திரையுலக ஆளுமை கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாகக் காலமானார். 73 வயதான அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யராஜ் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாக்யராஜ் என்கிற ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா" என்று கமல்ஹாசன் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory