» சினிமா » செய்திகள்
புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)
தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான மேக்கிங் பாணியைக் கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
'பீட்சா' மூலம் அறிமுகமாகி 'ஜிகிர்தண்டா', 'பேட்ட', 'மகான்' எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் ரெட்ரோ காலக்கட்ட உருவாக்கம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது முன்னணி நடிகர்களுக்குப் பதில், முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை வைத்து ஒரு சுயாதீனத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தைப் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிப் திரையிடத் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னரே திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இந்தச் சுயாதீன முயற்சித் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

