» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஜகவில் இணையாவிட்டால் கைது: அமலாக்கத் துறை மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் புகார்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:55:21 AM (IST)
பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை பா.ஜ.,வில் இணையும் படி தூது அனுப்பினர். பா.ஜ.,வின் மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தேர்தல் நேரத்தில் சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா உள்ளிட்ட 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க பா.ஜ.,வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
இப்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.-
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

ஆதார் சிஸ்டத்தில் ஊடுருவல்: ஏஐ பயன்படுத்தி தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:42:55 PM (IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)

துருக்கியில் பதுங்கியிருந்த போதைப்பாொருள் கடத்தல் மன்னன் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
புதன் 29, ஏப்ரல் 2026 11:49:58 AM (IST)

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)


