» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஜகவில் இணையாவிட்டால் கைது: அமலாக்கத் துறை மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் புகார்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:55:21 AM (IST)
பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை பா.ஜ.,வில் இணையும் படி தூது அனுப்பினர். பா.ஜ.,வின் மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தேர்தல் நேரத்தில் சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா உள்ளிட்ட 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க பா.ஜ.,வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
இப்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.-
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)




