» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
வியாழன் 5, செப்டம்பர் 2024 12:04:25 PM (IST)

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார். தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அப்போது, சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி பறிப்பு : பெண் டிஎஸ்பி சஸ்பெண்ட்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:33:44 PM (IST)

பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க திட்டமா? சபாநாயகர் புகாருக்கு காங். எம்.பி. சுதா மறுப்பு!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:00:00 PM (IST)

துணை வேந்தர்கள் நியமனம்: தமிழக அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து!
புதன் 4, பிப்ரவரி 2026 4:49:43 PM (IST)

அமெரிக்கா ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பா? மத்திய அரசு விளக்கம்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:52:14 PM (IST)

