» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் : பிரதமர் மோடி வரவேற்பு

திங்கள் 15, ஜூன் 2026 5:53:29 PM (IST)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக நிறைவு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாமல் இருந்த காரணத்தால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், உலகின் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய, இந்த 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு ஆசிய போரானது, உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவையும் பல நாடுகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிறைவு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்.

இந்த ஒப்பந்தமானது பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்துக்கும் வழிவகை செய்யும் என்றும் இந்தியா நம்புகிறது. எஞ்சிய பிரச்னைகள் குறித்த கலந்தாய்வுகள் ஒரு நீடித்த இறுதி உடன்பாட்டுடன் நிறைவடையும் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory