» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!

வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி வரை பிரம்மாண்ட முதலீடுகளைச் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஜூன் 1 முதல் 3 வரை இந்தியா வந்திருந்தார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உயர்நிலைச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் சார்ந்த மூலோபாய ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த உச்சிமாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பதை ஜப்பானின் தலைமை அமைச்சரவை துணைச் செயலாளர் மசானாவோ ஒசாகி உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் இந்திய முதலீடு ரூ. 6 லட்சம் கோடியைத் தொடும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக இந்த தற்போதைய முதலீடு அமைந்துள்ளது.

இந்த இருதரப்புச் சந்திப்பின் மூலம், இந்தியாவும் ஜப்பானும் இணைந்து எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எரிசக்தி கையிருப்பு முயற்சிகளை அதிகரிக்கும் ஆய்வில் ஈடுபடவுள்ளன. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்புக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகியின் புதிய 4-வது உற்பத்தி ஆலையைப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த ஆலைகளின் மொத்த மதிப்பு ரூ. 35,000 கோடியாகும். தற்போதைய சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு ஜப்பான்-இந்தியா இடையேயான வணிக உறவை வலுப்படுத்த இந்த பயணம் உறுதியான ஒத்துழைப்பைத் தந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் டோக்கியோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory