» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாணின் மகன் காயம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:12:10 PM (IST)
சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்தார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். ஜனசேனா கட்சி தலைவரான இவர் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகராகவும் செயல்பட்டு வருகிறார். பவன் கல்யாணுக்கு 8 வயதில் மார்க் சங்கர் என்ற மகன் உள்ளார்.8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், மார்க் சங்கர் பயின்று வரும் பள்ளியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மார்க் சங்கர் சிக்கிக்கொண்டான். அச்சிறுவனுக்கு கை, கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மகன் தீ விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் மார்க் சங்கரை காண பவன் கல்யாண் இன்று சிங்கப்பூர் விரைந்துள்ளார். இதற்காக இன்று அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!
திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)

வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)

அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது: பாகிஸ்தான் பிரதமர்
சனி 31, மே 2025 11:33:51 AM (IST)

அமெரிக்காவில் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, மே 2025 12:19:03 PM (IST)

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல்!
வியாழன் 29, மே 2025 11:49:46 AM (IST)

கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் புகுந்த கார் : 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்!
புதன் 28, மே 2025 11:43:56 AM (IST)

பவன் கல்யாண்Apr 9, 2025 - 09:10:57 AM | Posted IP 162.1*****