» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
சனி 26, ஏப்ரல் 2025 12:21:09 PM (IST)
பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாரக உள்ளது. அதேவேளை, இந்தியாவின் எந்தவிதமான மோதல்போக்கையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!
திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)

வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)

அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது: பாகிஸ்தான் பிரதமர்
சனி 31, மே 2025 11:33:51 AM (IST)

அமெரிக்காவில் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, மே 2025 12:19:03 PM (IST)

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல்!
வியாழன் 29, மே 2025 11:49:46 AM (IST)

கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் புகுந்த கார் : 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்!
புதன் 28, மே 2025 11:43:56 AM (IST)
