» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)
அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசாக்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கக் கனவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களில் உயர்தகுதி கொண்ட வெளிநாட்டினரை பணியமர்த்த வழங்கப்படும் இந்த எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தியர்களே பெற்று வருகின்றனர். குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
அரிசோனா மாநில எம்.பி. யெலி கிரேன் தாக்கல் செய்துள்ள ‘எச்-1பி விசா முறைகேட்டை முடிவுக்குக் கொண்டு வரும் சட்டம்-2026’ என்ற மசோதாவில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான பரிந்துரைகள்:
புதிய எச்-1பி விசாக்கள் வழங்குவதை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்தி வைத்தல்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 65 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகக் குறைத்தல்.
விசா பெறுவோருக்கான குறைந்தபட்ச ஆண்டுச் சம்பளத்தை 2 லட்சம் டாலராக (சுமார் ரூ.1.88 கோடி) நிர்ணயித்தல்.
விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் தங்களது குடும்பத்தினரை (H-4 விசா மூலம்) அழைத்து வரக் கூடாது.
லாட்டரி முறையை ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்தல்.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த எம்.பி.க்கள், "அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக மலிவான விலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் ஆவதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களுக்குப் பாதிப்பு: ஏற்கனவே கடந்த ஆண்டு விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த 3 ஆண்டுத் தடை மசோதா இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கும், அங்குப் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்தியர்களின் அமெரிக்கக் கனவு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)

ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

