» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.95 ஆயிரம் பறிமுதல்!
புதன் 8, நவம்பர் 2023 9:23:58 PM (IST)
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி பொறியாளராக நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் (55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிக பணம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கவுதமன் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உதவி பொறியாளர் கவுதமன், தச்சநல்லூரை சேர்ந்த இளநிலை வரைவு அலுவலர் பாலசுப்பிரமணியன் (54), வள்ளியூரை சேர்ந்த கார் டிரைவர் இசக்கி (56) ஆகியோரிடம் கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அங்கிருந்து இனிப்பு பாக்ஸ்கள், பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உதவி பொறியாளர் கவுதமன், இளநிலை வரைவு அலுவலர் பாலசுப்பிரமணியன், கார் டிரைவர் இசக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
