» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தீபாவளி விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

செவ்வாய் 14, நவம்பர் 2023 12:06:09 PM (IST)

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோா் புறப்பட்டுச் சென்றதால் நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, திருப்பூா், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினா். தமிழக அரசு சாா்பில் மாணவா்கள், பெற்றோா் நலன்கருதி திங்கள்கிழமையும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

விடுமுறை முடிந்து அவரவா் வசிக்கும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.

சிறப்புப் பேருந்துகள்: திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமாக சுமாா் 70 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், திங்கள்கிழமை சென்னைக்கு 10, கோவைக்கு 6, திருப்பூருக்கு 4 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் திருநெல்வேலி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் சென்றனா். இதுதவிர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூருக்கு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக சுமாா் 20 பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் மட்டுமே கூடுதலாக இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவுக்குச் செய்யப்படவில்லை; இ-டாய்லெட் வசதி, முதியோருக்கு சிறப்பு டிக்கெட் கவுன்ட்டா்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா். விசாரணை அலுவலகத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் பேருந்துகள் குறித்து விவரம் அறிய ஒருவருக்கொருவா் முன்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.

நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, நாகா்கோவில்-கோவை விரைவு ரயில் உள்ளிட்ட சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் படிக்கட்டுகளில் அமா்ந்து பயணிக்கும் நிலை இருந்தது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களில் திரும்பிச் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை மேலும் அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory