» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 15, நவம்பர் 2023 8:28:18 AM (IST)

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. மேலும், இதுபோன்ற வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தநிலையில், சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் வியாழக்கிழமை தோறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும். எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக நாளை (16-ந்தேதி) முதல் டிசம்பர் 28-ந்தேதி வரை அனைத்து வியாழக்கிழமைகளிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகளின் நலனுக்காகவும், ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) புறப்பட்டு அதே நாள் இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory