» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை பேட்டையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்மகும்பல் வெறிச்செயல்

புதன் 15, நவம்பர் 2023 8:33:34 AM (IST)

நெல்லை பேட்டையில் இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் காதர் ஒலி மகன் அசார் முகம்மது (35). இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று இரவில் அசார் முகம்மது நெல்லை பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்மகும்பல் திடீரென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அசார் முகம்மதுவை சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பலத்த காயம் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மேற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார், டவுன் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ேஷாபா ெஜன்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அசார் முகம்மது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ெகாலை செய்யப்பட்ட அசார் முகம்மதுவுக்கு ஹமீதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நெல்லை பேட்டையில் இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

தனி ஆளாகNov 15, 2023 - 02:25:44 PM | Posted IP 172.7*****

ஆயுதம் இல்லாமல் இருப்பவனை ஆயுதம் கொண்டு கும்பலாக வெட்டுவது தான் இந்த சில்லறை நாய்களின் வீரம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory