» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி: 16 நாள்களுக்கு பின் தடை நீக்கம்!
வியாழன் 16, நவம்பர் 2023 10:43:37 AM (IST)
மணிமுத்தாறு அருவியில் 16 நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மலைப்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது. மாஞ்சோலை, செங்கல்தேரி வனப்பகுதியிலும் தொடர்ந்து பலத்தமழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து அக்.31 முதல் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்துக் குறைந்து சீரானது. இதைத்தொடர்ந்து 16 நாள்களுக்குப் பின் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
