» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 11:56:50 AM (IST)
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இராமசந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இராமசந்திரபுரம் (வாகைகுளம்) விமான நிலையம் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது விமானம் நிலையம் விரிவாக்கத்திற்கு சுமார் 600 ஏக்கர் நிலம் முதலில் கையகப்படுத்தப்பட்டது. மேலும் தற்சமயம் சுமார் 100 ஏக்கர் நிலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கப்பட்டு விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி ஒன்றிய பகுதியான முடிவைதானேந்தல் பஞ்சாயத்து, கட்டாலங்குளம் பஞ்சாயத்து, சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து, குமாரகிரி பஞ்சாயத்து ஆகிய ஊர்களில் நிலம் கையகப்படுகிறது. ஆகவே இராமசந்திரபுரம் (வாகைகுளம்) விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நில உரிமையாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று காேரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 172.7*****
நிலம் இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வேலை கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.
VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 162.1*****
நிலம் இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வேலை கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப்போகிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திங்கள் 22, டிசம்பர் 2025 8:28:25 AM (IST)

ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 8:10:14 AM (IST)


VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 172.7*****