» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 10:06:10 AM (IST)
நாசரேத் அருகே மளிகைக் கடையில் இருந்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள ஞானராஜ் நகரைச் சேர்ந்த கிளாடிவின் பிரபாகர் என்பவர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று கடைக்கான பொருள்கள் வாங்குவதற்காக திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார். இதனால், அவரது மனைவி எஸ்கலின் பாத்திமா (34) கடையைக் கவனித்துக் கொண்டார். நண்பகலில் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தண்ணீர் பாட்டில், தம்ளர் கேட்டனர்.
அவர் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்றார். அப்போது இரு இளைஞர்களும் எஸ்கலின் பாத்திமாவின் முகத்தில் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனராம். நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் நாசரேத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் செல்வன் வழக்குப் பதிந்தார். மர்ம நபர்களை உதவி ஆய்வாளர் ராஜன், போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

