» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி, புளியரையில் எஸ்பி ஸ்ரீனிவாசன் ஆய்வு
வியாழன் 19, செப்டம்பர் 2024 8:22:57 AM (IST)
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது.
தென்காசி உட்கோட்டத்தில் புளியரை மற்றும் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு, அவர்களின் உடை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்..
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவான் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.