» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண்: மகன் பலி; 3பேருக்கு சிகிச்சை!

வியாழன் 19, செப்டம்பர் 2024 4:50:45 PM (IST)

ஆழ்வார்குறிச்சி அருகே கடன் பிரச்சனையால் பெண், தனது  3 குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார். இதில் ஒரு மகன் சிகிச்சை பலனின்றி இறந்தான்

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செல்ல பிள்ளையார் குளம் கிராமத்தைச் சார்ந்தவர் குழந்தை வேலு அவரது  மனைவி உச்சிமாகாளி இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் மகளிர் சுய உதவி குழுவில் 1.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் உச்சிமாகாளி  மற்றும் 3 ஆண் குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார்

இதில் ஒரு பையன் சிகிச்சை பலனின்றி இறந்தான் மீதமுள்ள மூன்று பேர்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory