» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்பாசமுத்திரத்தில் தற்காலிக வார சந்தை : ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்!
சனி 28, செப்டம்பர் 2024 12:37:40 PM (IST)

அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக வார சந்தையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக வார சந்தையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலையில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிகமாக வாரச்சந்தை இயங்குவதற்காக அனுமதி பெறப்பட்டு இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த சந்தையில் 30 கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதம் ரூ.711 மற்றும் சதுர அடிக்கு ரூ.3 என்ற விகிதத்தில் குறைந்த வடையில் இதற்கு முன்னர் பழைய வார சந்தையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் இந்த தற்காலிக சந்தை சிறப்பாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்..
இந்நிழ்வில், வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) பூவணன், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் சிவ சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்க சங்கத் தலைவர் மாரியப்பன், விற்பனைக்குழு செயலாளர் எழில் உட்பட அலுவலர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
