» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:52:28 AM (IST)
வாசுதேவநல்லூரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சிந்தாமணி பேரிப்புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் மகேந்திரன் (33) . இவர் மீது வாசுதேவநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிந்தாமணி பேரிப்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் வேல்முருகன்(30). இவர் போலீசார் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இருவரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் மகேந்திரன் மற்றும்வேல்முருகன் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
