» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:52:28 AM (IST)
வாசுதேவநல்லூரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சிந்தாமணி பேரிப்புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் மகேந்திரன் (33) . இவர் மீது வாசுதேவநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிந்தாமணி பேரிப்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் வேல்முருகன்(30). இவர் போலீசார் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இருவரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் மகேந்திரன் மற்றும்வேல்முருகன் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)


