» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அருகே 3வது திருமணம் செய்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி மடத்துதெருவைச் சேர்ந்த பலவேசம் மகள் முத்துலட்சுமி (30). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகன் (42) என்பவரை முத்துலட்சுமி 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் இரவில் வீட்டில் முத்துலட்சுமி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நேற்று காலையில் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மணிமுத்தாறு ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்பை துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் முருகனும் இல்லை. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று முன்தினம் இரவிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த கட்டையால் தனது மனைவி என்றும் பாராமல் முத்துலட்சுமியை தலையில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா?, வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள். மேலும், தலைமறைவான முருகனை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கல்லிடைக்குறிச்சி அருகே 3 திருமணம் செய்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory