» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தெப்பக்குளத்தில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற முயன்ற சக மாணவர் பலி

வியாழன் 17, அக்டோபர் 2024 4:23:32 PM (IST)

பழவூர் அருகே தெப்பக்குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் தத்தளித்த மாணவரை காப்பாற்றுவதற்காக குதித்த சக மாணவர் உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருகே தனியார் பொறியில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 6பேர் பழவூர் அருகே உள்ள தெற்குகன்னங்குளம் தெப்பகுளத்தில் குளிப்பதற்காக நேற்று சென்றனர். அதில் குளித்தபோது, ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தாராம். 

அவரை காப்பாற்றுவதற்காக கரையில் நின்றிருந்த நாகர்கோவில் வேதாநகைரைச் சேர்ந்த மிக்கேல் மகன் ஆன்றனி ஜெபின்(19) தெப்பக்குளத்தில் குதித்தாராம். அப்போது, அதிலுள்ள படிகட்டில் தலை அடிபட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் மூச்சு திணறிய மாணவர் காப்பாற்றப்பட்டார். இதுதொடர்பாக பழவூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory